தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ராதிகா, சீரியல் உலகிலும் முன்னனி நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்தார். இவர் தயாரித்து நடித்த ‘சித்தி’ சீரியல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. டி.ஆர்.பி-யில் பல வருடங்கள் இந்த சீரியல் தான் முதலிடத்தில் இருந்தது.
சித்தி சீரியலை தொடர்ந்து மேலும் பல சீரியல்களை தயாரித்து நடித்து வந்த ராதிகா, தான் தயாரித்த சரித்திரக்கால சீரியல் ஒன்று டி.ஆர்.பி-யில் பின் தங்கியிருந்ததால் அந்த சீரியலை பாதியில் நிறுத்தியதோடு, சன் தொலைக்காட்சியில் இருந்து வெளியேறி, வேறு ஒரு தொலைக்காட்சிக்காக கோடீஸ்வரி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இதற்கிடையே, சில மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சீரியல் பக்கம் திரும்பிய ராதிகா ‘சித்தி 2’-வுடன் கலம் இறங்கினார். முதல் வாரத்திலேயே ‘சித்தி 2’ சீரியல் டி.ஆர்.பி-யில் முதல் ஐந்தில் இடம்பிடித்தது. இதனால், ராதிகா உள்ளிட்ட ‘சித்தி 2’ குழுவின உற்சாகமடைந்தனர்.
இந்த நிலையில், ‘சித்தி 2 சீரியல் முதல் ஐந்தில் இருந்து வெளியேறியுள்ளது. முதல் எப்பிசோடுக்குப் பிறகு, அடுத்தடுத்த எப்பிசோட்கள் டி.ஆர்.பி-யில் சரிந்ததால், சித்தி 2 சீரியலுக்கு முதல் ஐந்தில் இடம் கிடைக்காமல் போனது. சீரியலில் மிகப்பெரிய வெற்றிகளை பார்த்த ராதிகாவுக்கு, கடந்த சில ஆண்டுகளாக சீரியல் மூலம் பல சோதனைகள் வருகிறது. அந்த வகையில், சித்தி 2 சீரியலும் தற்போது டி.ஆர்.பி-யில் இறங்குமுகமாக இருப்பதால், ‘சித்தி 2’ குழு ரொம்பவே அப்செட்டாகியுள்ளார்களாம்.
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...
ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...