தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த சமந்தா, திருமணத்திற்குப் பிறகு தெலுங்குப் படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். திருமணத்திற்குப் பிறகும் அவர் நடித்த படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றதால், அவருக்கு தெலுங்கு சினிமாவில் வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். இது தொடர்பாக தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்தது.
இந்த நிலையில், ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இருந்து சமந்தா விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர் கர்ப்பமடைந்திருப்பதால் தான் படத்தில் இருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...