‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமான மதுமிதா, தொடர்ந்து தனது காமெடி திறமையால் பல படங்களில் நடித்து வந்தவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் சர்ச்சையில் சிக்கினார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி போட்டியாளர்களில் ஒருவராக கருதப்பட்ட மதுமிதா, பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசியதோடு, தனது கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதால், அவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். போட்டியில் இருந்து வெளியேறிய பிறகு, விஜய் டிவி மீது பல்வேறு புகார்களை கூறியவர், காவல் நிலையத்திலும் புகார் அளித்தார்.
தனக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்திற்காக மிகப்பெரிய சட்ட போராட்டத்தை நடத்திய் மதுமிதா, தற்போது ட்விட்டர் பக்கத்தில் பல காட்டமான பதிவுகளை வெளியிடுகிறார்.
இந்த நிலையில், மகளிர் தினம் தொடர்பாக சமீபத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கும் மதுமிதா, “பெண் தன் தனிப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கிறாள். அவளுக்கான சுதந்திரத்தை யாரும் அனுமதிக்க அவசியமில்லை. சரியோ தவறோ அவளே கடந்து போவாள்.
உங்கள் சுட்டிக்காட்டல் அறிவுப் பூர்வமாக இருக்கட்டும். விமர்சிக்கிறேன் என காயப்படுத்தினால் ஏறி மிதித்துக் கடந்து போவேன். இனிய மகளிர் தின வாழ்த்துகள்.” என்று பதிவிட்டுள்ளார்.
இதில் இருந்து, மதுமிதாவின் கோபம் இன்னும் குறையவில்லை என்று நன்றாகவே தெரிகிறது.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...