திமுக பொதுச்செயாளர் பேராசிரியர் க.அன்பழகன், வயது முதிர்வால் ஏற்பட்ட உடல்நலக் குறைவால், கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்துவிட்டார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும், பேராசிரியர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
நடிகரும், தொழிலதிபருமான துரை சுதாகர், பேராசிரியர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”ஆசிரியர், பேச்சாளர், அரசியல்வாதி, எழுத்தாளர், சமூக சீர்த்திருத்தவாதி என பன்முகம் கொண்ட பேராசிரியர் க.அன்பழகனின் மறைவு தமிழகத்திற்கு பேரழிப்பாகும்.
அரசியலில் கலைஞர் கருணாநிதிக்கு தோழராக தோள் கொடுத்தவர், அவருக்கு பிறகு கழக தொண்டர்களுக்கு நம்பிக்கை கொடுத்ததோடு, செயல் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலினை தலைவராக்கி, திமுக-வை மேலும் வலுப்பெற செய்தார்.
தமிழக அரசியலின் மூத்தவராக திகழ்ந்தவர், திராவிட கொள்கைகளின் முழக்கமாக ஒலித்துக் கொண்டிருந்த முக்கியமானவராகவும் திகழ்ந்தார். அவரது மறைவு தமிழக அரசியலுக்கும், தமிழகத்திற்கும் இழப்பு என்றாலும், அவரது எண்ணங்களும், சிந்தனைகளும் திமுக தொண்டர்களுக்கு எப்போதும் உற்சாகத்தை கொடுக்கும்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சி தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...