தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் திரிஷா, சுமார் 15 வருடங்களாக முன்னணி ஹீரோயினாக நடித்து வருகிறார். இவர் நடிக்கும் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதால் திரிஷாவுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு படங்களின் வாய்ப்புகள் அதிகரித்து வருவதோடு, மலையாளப் படங்களின் வாய்ப்புகளும் குவிகின்றது.
ரஜினியுடன் ‘பேட்ட’ படத்தில் நடித்த திரிஷா, தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வந்தார். கொரட்டலா சிவா இயக்கும் இப்படத்திற்கு ‘ஆச்சார்யா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சிரஞ்சீவியின் 152 வது படமாக இப்படம் உருவாகி வருகிறது.
இந்த நிலையில், ‘ஆச்சார்யா’ படத்தில் இருந்து திரிஷா விலகிவிட்டார். இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் திரிஷா, சில சமயங்களில் சொல்வதை செய்ய தவறிவிடுகிறார்கள். அதனால் தான் ஆச்சார்யா படத்தில் இருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது, என்று தெரிவித்துள்ளார்.
மேலும், படக்குழுவினருக்கு வாழ்த்துகள் தெரிவித்த திரிஷா, தனது தெலுங்கு ரசிகர்களை வேறு ஒரு படம் மூலம் விரைவில் சந்திப்பேன், என்றும் தெரிவித்துள்ளார்.
‘ஆச்சார்யா’ படக்குழுவினருக்கும் திரிஷாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே அவர் படத்தில் இருந்து விலகிவிட்டாராம்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...