தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் திரிஷா, சுமார் 15 வருடங்களாக முன்னணி ஹீரோயினாக நடித்து வருகிறார். இவர் நடிக்கும் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதால் திரிஷாவுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு படங்களின் வாய்ப்புகள் அதிகரித்து வருவதோடு, மலையாளப் படங்களின் வாய்ப்புகளும் குவிகின்றது.
ரஜினியுடன் ‘பேட்ட’ படத்தில் நடித்த திரிஷா, தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வந்தார். கொரட்டலா சிவா இயக்கும் இப்படத்திற்கு ‘ஆச்சார்யா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சிரஞ்சீவியின் 152 வது படமாக இப்படம் உருவாகி வருகிறது.

இந்த நிலையில், ‘ஆச்சார்யா’ படத்தில் இருந்து திரிஷா விலகிவிட்டார். இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் திரிஷா, சில சமயங்களில் சொல்வதை செய்ய தவறிவிடுகிறார்கள். அதனால் தான் ஆச்சார்யா படத்தில் இருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது, என்று தெரிவித்துள்ளார்.
மேலும், படக்குழுவினருக்கு வாழ்த்துகள் தெரிவித்த திரிஷா, தனது தெலுங்கு ரசிகர்களை வேறு ஒரு படம் மூலம் விரைவில் சந்திப்பேன், என்றும் தெரிவித்துள்ளார்.
‘ஆச்சார்யா’ படக்குழுவினருக்கும் திரிஷாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே அவர் படத்தில் இருந்து விலகிவிட்டாராம்.
முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...