Latest News :

இசை நிகழ்ச்சியால் வந்த சர்ச்சை - ஏ.ஆர்.ரஹ்மான் புது முடிவு!
Monday September-18 2017

திரைப்படங்களுக்கு இசையமைப்பதுடன், வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இசை நிகழ்ச்சிகளை நடத்திவலும் ஏ.ஆர்.ரஹ்மான் தீவிரம் காட்டி வருகிறார். 

 

அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘நேற்று இன்று நாளை’ என்ற தலைப்பில் ரஹ்மான், லண்டனில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். இதில் இந்தி பாடல்களை விட தமிழ் பாடல்கள் அதிகமாக இடம்பெற்றதால், இந்தி பேசும் ரசிகர்கள் அதிருப்தியுற்று நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்கள். மேலும், தங்களுடைய அதிருப்தியை சமூக வலைதளங்களிலும் வெளியிட்டார்கள்.

 

இந்த விவகாரம் இந்தியாவில் பெரும் சர்ச்சையாக பேசப்பட்டதால், ஏ.ஆர்.ரஹ்மான் பெரும் கவலை அடைந்ததாக கூறப்பட்டது. இதற்கிடையே, இனி இதுபோன்ற இசை நிகழ்ச்சிகளில் தமிழ் மற்றும் இந்தி பாடல்களை ஒன்றாக பாடுவதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ள ரஹ்மான், அக்டோபர் மாதம் கனடாவில் நடைபெற உள்ள இசை நிகழ்ச்சியில் இது தொடர்பாக புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

 

அதாவது, கனடாவில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள இசை நிகழ்ச்சியை இரண்டாக பிரித்துள்ளார். ஒன்றில் தமிழ் பாடல்களும், மற்றொன்றில் இந்தி பாடல்களும் பாடப்போவதாக தெரிவித்துள்ள ரஹ்மான், இந்த தகவலை தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related News

632

கதை தேர்வு மூலம் வியக்க வைக்கும் அர்ஜூன் தாஸ்!
Saturday September-13 2025

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...

சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனத்துடன் வெற்றியை கொண்டாடிய ‘காந்தி கண்ணாடி’ படக்குழு!
Saturday September-13 2025

இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...

விஜய் ஆண்டனி என் குடும்பத்தில் ஒருவர் - ஷோபா சந்திரசேகர் பெருமிதம்
Saturday September-13 2025

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...

Recent Gallery