கொரோனா வைரஸ் தாக்குதலால் உலக நாடுகள் நடுங்கி போயிருக்கிறது. வல்லரசு நாடான அமெரிக்காவே அச்சம் கொண்ட நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 100 தாண்டியுள்ளது. இதனால், முன் எச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ள மத்திய அரசு, மாநில அரசுகளும் முன் எச்சரிக்கை நடவடிக்கையை போர்க்கால நடவடிக்கையாக எடுக்க வேண்டும், என்று அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, மக்கள் கூடும், ஷாப்பிங் மால், பள்ளிக்கூடங்கள், திரையரங்கங்கள் உள்ளிட்டவைகளை இன்று முதல் (மார்ச் 17) வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை மூட வேண்டும் என்று அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து திரையரங்க உரிமையாளர்கள், தங்களது அரசு உத்தரவு கிடைத்தவுடன், திரையரங்கங்களை மூடி விடுவோம், என்று அறிவித்துவிட்டனர்.
இதற்கிடையே, நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, கொரோனா வைரஸ் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வரும் மார்ச் 19 ஆம் தேதி முதல் அனைத்து வகை படப்பிடிப்புகளுக்கும் தடை விதிக்கிறோம், என்று அறிவித்தார்.
சிலர் வெளிநாட்டிலும், வெளி ஊர்களிலும் இருப்பதால் 19 ஆம் தேதி முதல் தடை விதித்திருப்பதாக தெரிவித்தவர், மறு அறிவிப்பு வரும் வரை இந்த தடை நீடிக்கும், என்றும் கூறினார்.
இந்த நடவடிக்கையால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்ட்டம் ஏற்படும் என்றாலும், மக்களின் உயிருக்காக இதனை செய்கிறோம், என்று ஆர்.கே.செல்வமணி கூறினார்.
இந்த தடையால் ரஜினிகாந்தின் ‘அண்ணாத்தே’, அஜித்தின் ‘வலிமை’ உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களின் படங்களும் பாதிக்கப்பட்டுள்ளது.
முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...