கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்ட கிரேன் அறுத்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் மூன்று பேய் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் கமல், இயக்குநர் ஷங்கர் மற்றும் லைகா நிறுவனத்திடம் விசாரணை மேற்கொண்டது.
மேலும், கடந்த 3 ஆம் தேதி கமல்ஹாசன் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதன்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் நேரில் ஆஜரான கமல்ஹாசனிடம், சுமார் இரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், விசாரணை என்ற பெயரில் தன்னை காவல்துறை துன்புறுத்துவதாக கமல்ஹாசன், இன்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சம்பவம் நடந்த இடத்தில், சம்பவம் தொடர்பாக நடித்துக்காட்ட சொல்லி தன்னை காவல்துறை வற்புறுத்தி வருவதாக மனுவில் தெரிவித்துள்ள கமல்ஹாசன், தன்னை துன்புறுத்துவதை நிறுத்துமாறு உத்தரவிட வேண்டும், என்றும் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசனின் இந்த மனுவை அவசர வழக்காக எடுத்துக்கொள்வதாக தெரிவித்திருக்கும் நீதிபதி, மனு மீதான விசாரணையை இன்றே நடத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...