Latest News :

கமலை துன்புறுத்தும் காவல்துறை! - நீதிமன்றத்தில் வழக்கு பதிவு
Tuesday March-17 2020

கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்ட கிரேன் அறுத்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் மூன்று பேய் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் கமல், இயக்குநர் ஷங்கர் மற்றும் லைகா நிறுவனத்திடம் விசாரணை மேற்கொண்டது.

 

மேலும், கடந்த 3 ஆம் தேதி கமல்ஹாசன் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதன்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் நேரில் ஆஜரான கமல்ஹாசனிடம், சுமார் இரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

 

இந்த நிலையில், விசாரணை என்ற பெயரில் தன்னை காவல்துறை துன்புறுத்துவதாக கமல்ஹாசன், இன்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சம்பவம் நடந்த இடத்தில், சம்பவம் தொடர்பாக நடித்துக்காட்ட சொல்லி தன்னை காவல்துறை வற்புறுத்தி வருவதாக மனுவில் தெரிவித்துள்ள கமல்ஹாசன், தன்னை துன்புறுத்துவதை நிறுத்துமாறு உத்தரவிட வேண்டும், என்றும் தெரிவித்துள்ளார்.

 

கமல்ஹாசனின் இந்த மனுவை அவசர வழக்காக எடுத்துக்கொள்வதாக தெரிவித்திருக்கும் நீதிபதி, மனு மீதான விசாரணையை இன்றே நடத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Related News

6325

காமெடி நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ‘கலப்பை மக்கள் இயக்கம்’!
Thursday November-20 2025

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...

’மாண்புமிகு பறை’ தலைப்பே ஆழமாக சிந்திக்க வைக்கிறது - தொல்.திருமாவளவன் பாராட்டு
Thursday November-20 2025

அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...

Recent Gallery