சினிமா துறையில் பல சங்கங்கள் இருந்தாலும், நடிகர்கள் சங்கம் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் தேர்தல் என்றால் பெரும் பரபரப்பு ஏற்படுகிறது. இந்த இரண்டு சங்கங்களுக்கும் அரசு சிறப்பு அதிகாரிகளை நியமித்திருக்கும் நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வரும் ஜூன் மாதம் தேர்தல் வைத்துக் கொள்ளலாம், என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பல முன்னணி தயாரிப்பாளர்கள் தலைமையில் அணிகள் உருவாகி வருகின்றன.
தற்போது வரை 4 அணிகள் இந்த தேர்தலில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. கலைப்புலி எஸ்.தாணு, சத்யஜோதி தியாகராஜன், ஞானவேல்ராஜா ஆகியோரது தலைமையில் ஒரு அணியும், ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தலைமையில் ஒரு அணி, ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு அணி என மூன்று அணிகள் உருவாகி வருவதாக கூறப்பட்ட நிலையில், அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தலைமையிலான அணி, இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
’தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி’ என்ற பெயரில் போட்டியிடும் இந்த அணியில் தலைவர் பதவிக்கு டி.சிவா போட்டியிடுகிறார்.
பி.எல்.தேனப்பன் மற்றும் ஜே.எஸ்.கே.சதீஷ் ஆகியோர் செயலாளர் பதவிக்கும், முரளிதரன் பொருளாளர் பதவிக்கும் போட்டியிடுகிறார்கள். ஆர்.கே.சுரேஷ் மற்றும் ஜி.தனஞ்செயன் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிருகிறார்கள்.
கே.ராஜன், ராதாரவி, கே.எஸ்.ஸ்ரீனிவாசன், சித்ரா லக்ஷ்மண், எச்.முரளி, எஸ்.எஸ்.துரைராஜ், கே.விஜயகுமர், ஆர்.வி.உதயகுமார், மனோஜ்குமார், கே.நந்தகோபால், மனோபாலா, பாபு கணேஷ், பஞ்சு சுப்பு, எம்.எஸ்.முருகராஜ், வினோத்குமார், ரங்கநாதன், பஞ்ச் பாரத், மதுரை செல்வம் மற்றும் மேலும் மூன்று தயாரிப்பாளர்கள் என 21 பேர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள்.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...