Latest News :

கல்யாணத்தால் கடுப்பான அனுஷ்கா! - காதலர் பற்றிய உண்மையை கூறினார்
Thursday March-19 2020

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா, ‘பாகுபலி’ படத்திற்குப் பிறகு உடல் எடை அதிகரித்ததால், படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு, உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்தி வந்தவர், தற்போது உடல் எடை குறைந்ததால் தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார்.

 

இதற்கிடையே, அனுஷ்காவின் திருமணம் பற்றி அவ்வபோது வதந்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. நடிகர் பிரபாஷுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்ட அனுஷ்கா, பிறகு ஒரு தொழிலதிபரை திருமணம் செய்ய இருப்பதாக கூறப்பட்டது. அதன் பிறகு, முன்னணி இயக்குநர் ஒருவரது மகனை அனுஷ்கா திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இவை அனைத்தையும் அனுஷ்கா மறுத்து விளக்கம் அளித்தாலும், அவரது திருமணம் பற்றிய வதந்திகள் வெளியாவது தொடர்கதையாகவே இருக்கிறது.

 

இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் அனுஷ்காவிடம் திருமணம் குறித்து கேட்டதற்கு, அவர் மிகவும் கோபமடைந்து விட்டார். திருமணத்தை விட்டுத்தள்ளுங்க, அது நடக்கும் போது நானே அறிவிபேன், என்று கடுப்பாக பதில் அளித்தார்.

 

மேலும், காதல் குறித்து பேசிய அனுஷ்கா, 2008 வருடத்தில் நான் ஒருவரை காதலித்தேன். அந்த உறவு அருமையானது. எனக்கு அது மிகவும் ஸ்பெஷலானது. அவர் என் மனதுக்கு பிடித்தவராகவும், என் மரியாதைக்குரியவராகவும் இருப்பதால் அவர் யார்? என்பதை கூற மாட்டேன், என்றும் தெரிவித்திருக்கிறார்.

Related News

6334

காமெடி நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ‘கலப்பை மக்கள் இயக்கம்’!
Thursday November-20 2025

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...

’மாண்புமிகு பறை’ தலைப்பே ஆழமாக சிந்திக்க வைக்கிறது - தொல்.திருமாவளவன் பாராட்டு
Thursday November-20 2025

அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...

Recent Gallery