கொரோனா வைரஸால் உலக நாடுகள் பல ஆட்டம் கண்டு வருகிறது. வல்லரசு நாடுகளே இந்த வைரஸால் விழி பிதுங்கி நிற்கும் நிலையில், இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தற்போது வரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 166 தாண்டியுள்ள நிலையில், அனைத்து மாநிலங்களிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, தமிழகத்தில் பல்வேறு முன் எச்சரிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், திரைப்பட படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதோடு, தியேட்டர்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. அதேபோல், சில பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இளம் நடிகை ஒருவர் கொரோனா பாதிப்பால் தனது திருமணத்தை சத்தமில்லாமல், மக்கள் கூட்டம் இல்லாமல் நடத்தியிருக்கிறார்.
நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘உறியடி 2’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர் விஷ்மயா. கேரள மாநிலத்தை சேர்ந்த மாடலான இவர், இப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அப்படத்திற்கு பிறகு வேறு எந்த படத்திலும் நடிக்காத விஷ்மயா, பிரபல மலையாள பாடகர் அபிஜித்தை திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.

கொல்லத்தில் நடைபெற்ற விஷ்மயா - அபிஜித் திருமணத்தில் இருவரது குடும்பத்தார் மட்டுமே கலந்துக் கொண்டார்கள். கொரோனா பீதியால் திருமணத்திற்கு யாரையும் அழைக்காத இவர்கள், கொரோனாவில் இருந்து கேரளா விடுபட்ட பிறகு, தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து வரவேற்பு செய்ய திட்டமிட்டுள்ளார்களாம்.


அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...