தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள நிலையில், இந்த தேதலில் சுமார் 4 அணிகள் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தலைமையில் போட்டியிடும் அணி அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று மறைந்த இயக்குநரும், தயாரிப்பாளருமான இராம நாராயணனின் மகன் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தலைமையிலான அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
’தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணி’ என்ற பெயரில் போட்டியிடும் இந்த அணியில், தலைவர் பதவிக்கு இராம நாராயணன் முரளி என்கிற என்.ராமசாமி போட்டியிடுகிறார்.
செயலாளர் பதவிக்கு கே.ஜே.ஆர், ரதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்கள். பொருளாளர் பதவிக்கு சந்திரபிரகாஷ் ஜெயின் போட்டியிடுகிறார்.
சுபாஷ் சந்திரபோஸ், மைக்கேல் ராயப்பன் ஆகியோர் செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள். செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 21 பேர் போட்டியிடுகிறார்கள்.
தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணியின் அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் எஸ்.வி.சேகர் கலந்துக் கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...