தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரது படங்கள் தொடர் தோல்விப் பெற்று வந்த நிலையில், ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படம் வெற்றி பெற்றது. இருப்பினும், அப்படத்தை தொடர்ந்து வெளியான ‘ஹீரோ’ மிகப்பெரிய தோல்வியடைந்தது. மேலும், கதை திருட்டு விவகாரத்திலும் அப்படம் சிக்கியது.
போஸ்கோ பிரபு என்ற உதவி இயக்குநர் ‘ஹீரோ’ படத்தின் கதை தன்னுடைய என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, ‘ஹீரோ’ படத்தை பிற மொழிகளில் வெளியிட இடைக்கால தடை விதித்ததோடு, சாட்டிலைட் உரிமையும் விற்க கூடாது, என்று உத்தரவு பிறப்பித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு ‘சக்தி’ என்ற தலைப்பில் வரும் மார்ச் 20 ஆம் தேதி (நாளை) ஆந்திராவில் வெளியாக இருப்பதாக விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் போஸ்கோ பிரபு, நீதிமன்றம் ‘ஹீரோ’ படத்தை பிற மொழிகளில் வெளியிட தடை விதித்திருக்கும் நிலையில், அப்படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிடுவது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல், என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் திரையரங்கம் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்கள் மார்ச் 31 ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கிறது, என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...