தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரது படங்கள் தொடர் தோல்விப் பெற்று வந்த நிலையில், ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படம் வெற்றி பெற்றது. இருப்பினும், அப்படத்தை தொடர்ந்து வெளியான ‘ஹீரோ’ மிகப்பெரிய தோல்வியடைந்தது. மேலும், கதை திருட்டு விவகாரத்திலும் அப்படம் சிக்கியது.
போஸ்கோ பிரபு என்ற உதவி இயக்குநர் ‘ஹீரோ’ படத்தின் கதை தன்னுடைய என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, ‘ஹீரோ’ படத்தை பிற மொழிகளில் வெளியிட இடைக்கால தடை விதித்ததோடு, சாட்டிலைட் உரிமையும் விற்க கூடாது, என்று உத்தரவு பிறப்பித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு ‘சக்தி’ என்ற தலைப்பில் வரும் மார்ச் 20 ஆம் தேதி (நாளை) ஆந்திராவில் வெளியாக இருப்பதாக விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் போஸ்கோ பிரபு, நீதிமன்றம் ‘ஹீரோ’ படத்தை பிற மொழிகளில் வெளியிட தடை விதித்திருக்கும் நிலையில், அப்படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிடுவது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல், என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் திரையரங்கம் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்கள் மார்ச் 31 ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கிறது, என்பது குறிப்பிடத்தக்கது.
முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...