டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு நடந்த மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா கற்பழிப்பு சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. நான்கு பேரால் நாசமாக்கப்பட்டு சித்ரவதைக்கு உள்ளான நிர்பயா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்தும், சில நாட்களில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
இந்த குற்றத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டாலும், இந்த வழக்கு கடந்த 7 வருடங்களாக நடந்து வந்த நிலையில், இன்று அதிகாலை 5.30 மணிக்கு நான்கு குற்றவாளிகளையும் திகார் சிறையில் தூக்கிலிட்டு தண்டனையை நிறைவேற்றப்பட்டது.
இந்த தண்டனைக்கு ஏராளமானவர்கள் வரவேற்பு தெரிவித்து வந்த நிலையில், நடிகையும், காங்கிரஸ் பிரமுகருமான குஷ்பு, ”ஒரு தாயாக இந்த தீர்ப்பை வரவேற்கிறேன். ஆனாலும் தண்டனைகள் உடனடியாக வழங்கியிருக்க வேண்டும். அப்போது தான் குற்றங்கள் குறையும். ஏன் 7 வருட கால தாமதம்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...