Latest News :

ரஜினி, கமல் அரசியலுக்கு வந்தால் என்ன செய்ய வேண்டும்? - நடிகர் கிஷோர் பதில்!
Monday September-18 2017

‘பொல்லாதவன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கிஷோர், தொடர்ந்து ‘ஆடுகளம்’, ‘விசாரணை’ போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராகியுள்ளார்.

 

கிஷோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ‘யார் இவன்’ படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ள நிலையில், அவர் ஹீரோவாக நடித்துள்ல ‘களத்தூர் கிராமம்’ விரைவில் வெளியாக உள்ளது.

 

இந்த நிலையில், ரஜினி மற்றும் கமல் ஆகியோர் அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் கிஷோர் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து கூறிய அவர், “ரஜினி, கமல் இருவரும் நல்ல நடிகர்கள். சினிமா மூலம் மக்களைச் சென்றடைந்தவர்கள். இப்போது சினிமாவில் இருந்து கொண்டே மக்களுக்கு நன்மை செய்து வருகிறார்கள்.

 

எதிர்காலத்தில் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்ய விரும்புகிறார்கள். இது வரவேற்க வேண்டிய விஷயம்தான். கமல், அரசியலுக்கு ஏற்கனவே வந்து விட்டதாக சொல்லிவிட்டார். ரஜினியும் வர வேண்டும். ரஜினியும், கமலும் நேரடி அரசியலுக்கு வந்து தமிழ் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதே எனது ஆசை.” என்றார்.

 

கமலுடன் ’தூங்காவனம்’ படத்தில் நடித்த கிஷோர், ரஜினியுடன் ‘கபாலி’ படத்தில் நடித்துள்ளார்.

Related News

634

கதை தேர்வு மூலம் வியக்க வைக்கும் அர்ஜூன் தாஸ்!
Saturday September-13 2025

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...

சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனத்துடன் வெற்றியை கொண்டாடிய ‘காந்தி கண்ணாடி’ படக்குழு!
Saturday September-13 2025

இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...

விஜய் ஆண்டனி என் குடும்பத்தில் ஒருவர் - ஷோபா சந்திரசேகர் பெருமிதம்
Saturday September-13 2025

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...

Recent Gallery