Latest News :

ரஜினி, கமல் அரசியலுக்கு வந்தால் என்ன செய்ய வேண்டும்? - நடிகர் கிஷோர் பதில்!
Monday September-18 2017

‘பொல்லாதவன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கிஷோர், தொடர்ந்து ‘ஆடுகளம்’, ‘விசாரணை’ போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராகியுள்ளார்.

 

கிஷோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ‘யார் இவன்’ படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ள நிலையில், அவர் ஹீரோவாக நடித்துள்ல ‘களத்தூர் கிராமம்’ விரைவில் வெளியாக உள்ளது.

 

இந்த நிலையில், ரஜினி மற்றும் கமல் ஆகியோர் அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் கிஷோர் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து கூறிய அவர், “ரஜினி, கமல் இருவரும் நல்ல நடிகர்கள். சினிமா மூலம் மக்களைச் சென்றடைந்தவர்கள். இப்போது சினிமாவில் இருந்து கொண்டே மக்களுக்கு நன்மை செய்து வருகிறார்கள்.

 

எதிர்காலத்தில் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்ய விரும்புகிறார்கள். இது வரவேற்க வேண்டிய விஷயம்தான். கமல், அரசியலுக்கு ஏற்கனவே வந்து விட்டதாக சொல்லிவிட்டார். ரஜினியும் வர வேண்டும். ரஜினியும், கமலும் நேரடி அரசியலுக்கு வந்து தமிழ் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதே எனது ஆசை.” என்றார்.

 

கமலுடன் ’தூங்காவனம்’ படத்தில் நடித்த கிஷோர், ரஜினியுடன் ‘கபாலி’ படத்தில் நடித்துள்ளார்.

Related News

634

‘கொம்பு சீவி’ பட இசை வெளியீட்டு விழாவில் சரத்குமார் வைத்த கோரிக்கை!
Tuesday December-16 2025

இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொம்பு சீவி' திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட் , முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...

‘டியர் ரதி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Sunday December-14 2025

'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த  இன்சாம்னியாக்ஸ் ட்ரீம்  கிரியேஷன்ஸ் எல்...

சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ.95 லட்சம் நிதி வழங்கிய தமிழக அரசு!
Friday December-12 2025

தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...

Recent Gallery