கடந்த ஜனவரி 24 ஆம் தேதி சேரன் நடிப்பில் வெளியான படம் ‘ராஜாவுக்கு செக்’. சாய் ராஜ்குமார் எழுதி இயக்கிய இப்படத்தை மலையாள தயாரிப்பாளர்களான சோமன் பல்லாட், தாமஸ் கொக்காட் ஆகியோர் தயாரித்திருந்தனர்.
பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமையை மையமாக வைத்து உருவான இப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும், வியாபார ரீதியாக தோல்வியை தழுவியது. அதே சமயம், சில யுடியுப் விமர்சகர்கள், படத்திற்கு எதிராக மிக கடுமையாக விமர்சனம் செய்தார்கள்.
இந்த நிலையில், இப்படம் தொடர்பாக பெண் ஒருவர், சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த சேரன், “அநியாயமா கொன்னுட்டாங்கம்மா படத்தை… எங்க ஆத்தா கொடுத்த பால் எல்லாம் ரத்தமா போகுதேன்னு தேவர் மகன்ல டயலாக் இருக்கும்.. அப்படி கஷ்டபட்டு உழைச்சதை காசுக்கு ஆசைப்பட்ட நாய்ங்க கொன்னுட்டாங்கம்மா…. அவனுக நல்லா இருப்பாங்கன்றீங்க… வயிறு எரியுதும்மா.. சும்மா விடாது எங்களோட உழைப்பு…” என்று பதிவுட்டுள்ளார்.
சேரனின் பதிவுக்கு கமெண்ட் போட்ட அந்த பெண், ”உண்மைதான் சார்..நல்லபடியாக ரீச்சாகி இருந்தால் பெரிய அளவில் பேசப்பட்டிருக்கும்…இன்னும் பத்து வருடங்கள் கழித்து “ராஜாவுக்கு செக்” படம்போல வருமான்னு பேசுவாங்க…Worried face” என்று தெரிவித்தார்.
மேலும், பலர் சேரனின் பதிவுக்கு வரவேற்பு தெரிவித்ததோடு, ‘ராஜவுக்கு செக்’ படத்தை பாராட்டியும் வருகிறார்கள்.
பணம் வாங்கிக் கொண்டு விமர்சனம் செய்யும் சில யுடியுப் விமர்சகர்கள், பணம் கொடுக்கவில்லை என்பதால், ‘ராஜாவுக்கு செக்’ படத்தை கடுமையாக விமர்சனம் செய்ததை தான், சேரன், “காசுக்கு ஆசைப்பட்ட நாய்ங்க” என்று குறிப்பிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...