’ஜூலியும் 4 பேரும்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்த ஆல்யா மானசா, ‘ராஜா ராணி’ தொலைக்காட்சி தொடர் மூலம் மக்களிடம் பிரபலமானார். இதே சீரியலில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவும், ஆல்யா மானசாவும் ரீல் ஜோடிகளாக இருந்து பிறகு ரியல் ஜோடியகளாக மாறினார்கள்.
பல ஆண்டுகளாக காதலித்து வந்த சஞ்சீவ் - ஆல்யா மானசாவின் திருமணத்திற்கு ஆல்யா பெற்றோர் சம்மதிக்காத்தால், ரகசியமாக திருமணம் செய்துக் கொண்டார்கள். திருமணத்திற்கும் பிறகும் ஆல்யாவை அவரது தாய் ஏற்றுக் கொள்ளவில்லை, என்று அவர் பல பேட்டிகளில் கவலை தெரிவித்து வந்தார்.
இதற்கிடையே, கர்ப்பமான ஆல்யா மானசாவுக்கு சமீபத்தில் வலைகாப்பு நடத்தப்பட்டது. அதில் அவரது அம்மா கலந்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், ஆல்யா மானசாவுக்கு இன்று பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த தகவலை சஞ்சீவ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது ஆல்யா மானசா, சஞ்சீவ் மற்றும் அவர்களது குழந்தைக்கு சீரியல் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...