’ஜூலியும் 4 பேரும்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்த ஆல்யா மானசா, ‘ராஜா ராணி’ தொலைக்காட்சி தொடர் மூலம் மக்களிடம் பிரபலமானார். இதே சீரியலில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவும், ஆல்யா மானசாவும் ரீல் ஜோடிகளாக இருந்து பிறகு ரியல் ஜோடியகளாக மாறினார்கள்.
பல ஆண்டுகளாக காதலித்து வந்த சஞ்சீவ் - ஆல்யா மானசாவின் திருமணத்திற்கு ஆல்யா பெற்றோர் சம்மதிக்காத்தால், ரகசியமாக திருமணம் செய்துக் கொண்டார்கள். திருமணத்திற்கும் பிறகும் ஆல்யாவை அவரது தாய் ஏற்றுக் கொள்ளவில்லை, என்று அவர் பல பேட்டிகளில் கவலை தெரிவித்து வந்தார்.
இதற்கிடையே, கர்ப்பமான ஆல்யா மானசாவுக்கு சமீபத்தில் வலைகாப்பு நடத்தப்பட்டது. அதில் அவரது அம்மா கலந்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், ஆல்யா மானசாவுக்கு இன்று பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த தகவலை சஞ்சீவ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது ஆல்யா மானசா, சஞ்சீவ் மற்றும் அவர்களது குழந்தைக்கு சீரியல் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...