தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த ராதிகா, சீரியல் உலகிலும் ராணியாக வலம் வந்தார். இவர் தயாரித்து நடித்த ‘சித்தி’ சீரியல் திரைப்படங்களுக்கு நிகராக இருந்ததோடு, சீரியல் பார்க்காதவர்களையும் கவர்ந்தது. அந்த சீரியலை தொடர்ந்து பல சீரியல்களை தயாரித்து வந்த ராதிகா, கடந்த சில ஆண்டுகளாகவே சீரியல் உலகில் சறுக்கல்களை சந்தித்து வருகிறார்.
பிரம்மாண்டமான முறையில் தயாரித்து நடித்த சீரியலை பாதியிலேயே நிறுத்திய ராதிகா, சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகு ‘சித்தி 2’ சீரியலை தொடங்கினார். இந்த சீரியல் ஒளிபரப்பான முதல் வாரத்திலேயே டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதல் 5 இடங்களை பிடித்ததால், சித்தி 2 சீரியல் குழுவும், ராதிகாவும் உற்சாகமடைந்தனர்.
இந்த நிலையில், முதல் வாரத்திற்குப் பிறகு ‘சித்தி 2’ சீரியலின் டி.ஆர்.பி ரேட்டிங் சரிய தொடங்கியது. தற்போது வரை முதல் 5 இடத்தை பிடிக்க முடியாமல் ‘சித்தி 2’ சீரியல் திணறி வருவதால், ராதிகா வருத்தமடைந்திருக்கிறாராம்.
மேலும், சித்தி 2 சீரியலின் டி.ஆர்.பி உயர்வடையாமல், இந்த நிலை தொடர்ந்தால், அந்த சீரியலின் நேரத்தை தொலைக்காட்சி மாற்றக்கூடும் என்ற பேச்சு அடிபடுவதால், ராதிகா சீரியல் உலகில் காணமால் போகும் நிலை உருவாகிவிடும் என்றும் கூறப்படுகிறது.
முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...