நடிகரும், தோல் மருத்துவருமான சேதுராமன் நேற்று முன் தினம் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தது திரையுலகையும், மருத்துவ துறையையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 37 வயதுடைய சேதுவின் இந்த திடீர் மரணம் ஒரு புறம் இருக்க, இந்தியா முழுதும் அமலில் உள்ள 144 தடை உத்தரவால், நேற்று நடைபெற்ற அவரது இறுதி ஊர்வலத்தில் அவரது நண்பர்களால் பங்கேற்க முடியவில்லை, என்பது மற்றொரு சோகம்.
பிரபல மருத்துவர் என்பதால், சேதுவுக்கு மருத்துவ துறையிலும், சினிமா துறையிலும் ஏராளமான நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால், நேற்றிய இறுதி ஊர்வலத்தில் யாராலும் பங்கேற்க முடியவில்லை. சேதுராமனின் நெருங்கிய நண்பரான நடிகர் சந்தானம், சேதுவின் இறுதி சடங்கில் பங்கேற்றதோடு, அவரது இறுதி ஊர்வலகத்திலும் பங்கேற்றார்.
சேது உடலை ஆம்புலன்ஸில் ஏற்றிய போது, அவரது உறவினர் அழுதவாறே, “அவனுக்கு ஆடி காரும், பென்ஸ் காரும் தானே பிடிக்கும், இப்படி ஆம்புலன்ஸில் எடுத்து செல்கிறீர்களே” என்று கூறியது, அங்கிருந்தவர்களை கலங்க வைத்துவிட்டது.
'நாக்குக்கு நரம்பில்லை . எதை வேண்டுமானாலும் பேசும்' என்பார்கள்...
இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி நாயகனாகவும், சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடிக்க, கடந்த மாதம் வெளியான ‘கருடன்’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...
விஷ்ணு மஞ்சுவின் கனவுத் திட்டமான 'கண்ணப்பா' படத்தை ஏவிஏ என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் 24 பிரேம்ஸ் பேக்டரி நிறுவனங்கள் இணைந்து பிரமாண்டமாக தயாரித்து வருகிறது...