உலகியே உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் வைரஸ் பரவமால் தடுக்க, இந்தியா முழுவதும் வரும் மார்ச் 21 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தாலும், அத்தியாவாச தேவைகள் மக்களுக்கு கிடைக்கும் வகையில், சில கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல், ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கும் நடவடிக்கையில் மாநகராட்சிகள் ஈடுபட்டு வருகிறது.
பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களும், ஏழை எளியோருக்கு பல உதவிகளை செய்து வருகிறார்கள். அதன்படி, சினிமா துறை தொழிலாளர்களுக்கு பல முன்னணி நடிகர், நடிகைகள் பண உதவி மற்றும் பொருள் உதவி செய்து வருகிறார்கள்.
இப்படி அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் உதவி கிடைத்து வரும் நிலையில், திருநங்கைகளை மட்டும் இதுவரை யாரும் கண்டுக்கொள்ளவில்லை. அவர்கள் உணவுக்கே சிரமப்படும் நிலை தற்போது ஏற்பட்டிருக்கிறது. இதனை அறிந்த மலையால சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க கூடிய மஞ்சு வாரியர், முதல் ஆளாக திருநங்கைகளுக்கு உதவி செய்திருக்கிறார்.

தனது மேக்கப் மேன் மூலம், திருநங்கைகள் கஷ்ட்டப்படுவதை அறிந்த நடிகை மஞ்சு வாரியர், ரூ.35 பண உதவி செய்திருக்கிறார். அதை வைத்து அவர்களுக்கு அரிசி உள்ளிட்ட சமையல் பொருட்கள் வாங்கி கொடுத்திருக்கிறார்கள். மஞ்சு வாரியரின் இந்த உதவியை அறிந்து பலர் அவரை பாராட்டி வருகிறார்கள்.
மேலும், மலையாள நடிகர் சங்கத்திற்கு மஞ்சு வாரியர் ரூ.5 லட்சம் நிதி வழங்கியுள்ளார்.
முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...