கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகின் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தவும், வைரஸ் தாக்காமல் இருக்கவும் எந்தவித மருந்தும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. அதேபோல், ஒருவரை வைரஸ் தாக்கினால், அவருக்கு அதற்கான அறிகுறி தெரிய சுமார் 14 நாட்கள் ஆகும் என்பதால், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த மருத்துவர்கள் பரிந்துரை செய்து வருகிறார்கள்.
இதனால் தான், அனைவரும் ஊரடங்கு உத்தரவு மூலம் தனித்திருக்க வேண்டும், என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சினிமா பிரபலங்களும் மக்களிடம் வழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், பிரபல மலையாள நடிகராஜ சுரேஷ் கோபியின் மகன், சமீபத்தில் லண்டனில் இருந்து இந்தியா திரும்பியுள்ளார். மேலும், அவர் பயணித்த விமானத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தனது குடும்ப மருத்துவர் பரிந்துரைப்படி நடிகர் சுரேஷ் கோபி, தனியாக ஒரு பிளாட் எடுத்து அதில் தனது மகனை தனிமைப்படுத்தியுள்ளாராம்.
சுரேஷ் கோபியின் மகனுக்கு இதுவரை கொரோனா பாதிப்பிற்கான எந்த ஒரு அறிகுறியும் ஏற்படவில்லை, என்றாலும் பிறரின் நலனுக்காக அவர் இப்படி ஒரு முடிவை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...