மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கையால் நாட்டின் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில், சினிமா துறையும், அத்துறையில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதையடுத்து சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், முன்னணி நடிகர், நடிகைகள் பல்வேறு வகையில் உதவி செய்து வருகிறார்கள்.
அதன்படி, தமிழ் சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், தென்னிந்திய திரையுலக தொழிலாளர்கள் சம்மேளமான பெப்ஸி அமைப்பு, நிதி திரட்டி வருகிறது. நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என்று ஏராளமானோர் பெப்ஸி அமைக்கு நிதியாகவும், பொருளாகவும் உதவி செய்து வருகிறார்கள்.
நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நன்கொடையாக வழங்கினார். அதேபோல் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சிவகுமார் ஆகியோர் ரூ.10 லட்சமும், நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சமும் வழங்கினார்கள். மேலும் பல நடிகர்கள் பெப்ஸி அமைப்புக்கு அரிசி மூட்டைகளை நன்கொடையாக வழங்கினார்கள்.
இந்த நிலையில், தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா, பெப்ஸி அமைப்புக்கு ரூ.20 லட்சம் நன்கொடையாக வழங்கியிருக்கிறார்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...