மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கையால் நாட்டின் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில், சினிமா துறையும், அத்துறையில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதையடுத்து சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், முன்னணி நடிகர், நடிகைகள் பல்வேறு வகையில் உதவி செய்து வருகிறார்கள்.
அதன்படி, தமிழ் சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், தென்னிந்திய திரையுலக தொழிலாளர்கள் சம்மேளமான பெப்ஸி அமைப்பு, நிதி திரட்டி வருகிறது. நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என்று ஏராளமானோர் பெப்ஸி அமைக்கு நிதியாகவும், பொருளாகவும் உதவி செய்து வருகிறார்கள்.
நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நன்கொடையாக வழங்கினார். அதேபோல் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சிவகுமார் ஆகியோர் ரூ.10 லட்சமும், நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சமும் வழங்கினார்கள். மேலும் பல நடிகர்கள் பெப்ஸி அமைப்புக்கு அரிசி மூட்டைகளை நன்கொடையாக வழங்கினார்கள்.
இந்த நிலையில், தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா, பெப்ஸி அமைப்புக்கு ரூ.20 லட்சம் நன்கொடையாக வழங்கியிருக்கிறார்.
முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...