Latest News :

கொரோனா பாதிப்பு! - தமிழக அரசை ஓரம் கட்ட விஜய் போட்ட திட்டம்
Saturday April-04 2020

கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கையால் நாட்டு மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். குறிப்பாக தினக்கூலி பெறும் தொழிலாளர்களின் நிலை மிக மோசமாக உள்ளது. இதற்காக அரசு நிவாரண நிதி வழங்கி வருவதோடு, சில அமைப்புகளும் ஏழை எளியோருக்கு உதவி செய்து வருகிறார்கள்.

 

அதேபோல், மத்திய அரசும், மாநில அரசும் மக்களிடம் நிதி பெறுவதற்காக கொரோனா பிரதமர் நிவாரண நிதி மற்றும் கொரோனா முதலமைச்சர் நிவாரண நிதியை உருவாக்கி அதன் மூலம் நிதி பெற்று வருகிறது. பல்வேறு துறையை சார்ந்தவர்கள், நிதி வழங்கி வருகிறார்கள். பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கியிருக்கிறார். அதேபோல், தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பலர் நிதி வழங்கி வருகிறார்கள். நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சம் நிதி வழங்கியுள்ளார்.

 

ஆனால், முன்னணி நடிகர்களான கமல், ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்டவர்கள் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இதுவரை நிதி வழங்கவில்லை. அதுமட்டும் இன்றி, பல நடிகர்கள் சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் பெப்ஸி அமைப்புக்கு நிதி வழங்கிய நிலையில் விஜய், அஜித் ஆகியோர் இதுவரை பெப்ஸி அமைப்புக்கு எந்த ஒரு நன்கொடையும் வழங்கவில்லை. இதனால், விஜய், அஜித் ஆகியோரை பலர் விமர்சித்தும் வருகிறார்கள்.

 

இந்த நிலையில், கொரோனா முன் எச்சரிக்கையால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு உதவி செய்ய விஜய் திட்டம் ஒன்றை வகுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

அதாவது, மத்திய மற்றும் மாநில அரசுகள் தனக்கு தொல்லைக் கொடுக்கும் விதமாக வருமான வரித்துறை சோதனையை ஏவி விட்டதால் பெரும் கோபத்தில் இருக்கும் விஜய், மத்திய மற்றும் மாநில அரசுகள் மூலமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யக் கூடாது, என்று முடிவு எடுத்திருக்கிறாராம்.

 

அதே சமயம், ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்த பிறகு தனது மக்கள் இயக்கம் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவி செய்யும் திட்டம் ஒன்றையும் விஜய் வகுத்துள்ளாராம். இதற்காக, தமிழகம் முழுவதும் உள்ள தனது மக்கள் இயக்க அமைப்புகளை தயார்ப்படுத்தும் பணிகளையும் முடக்கி விட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Related News

6392

இணையத் தொடர் இயக்க முதலில் தயங்கினேன்! - ‘குட் வொய்ஃப்’ தொடர் பற்றி நடிகை ரேவதி
Friday July-04 2025

ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...

ரசிகர்களின் அன்பு வியக்க வைத்து விட்டது! - ‘லவ் மேரேஜ்’ வெற்றி விழாவில் நடிகர் விக்ரம் பிரபு உற்சாகம்
Friday July-04 2025

அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம்  - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

’டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ் 2’ புத்தகம் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற திரை பிரபலங்கள்
Thursday July-03 2025

தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...

Recent Gallery