தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிஸியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷுக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. பா.ஜ.க-வை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரது மகனை தான் கீர்த்தி சுரேஷுக்கு பேசி முடிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்பட்டது.
சினிமாவில் பிஸியாக இருக்கும், அதுவும் இந்த இளம் வயதிலேயே கீர்த்தி சுரேஷுக்கு திருமணம், என்ற இந்த செய்தி திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியடைய செய்தது. அதே சமயம், இது வதந்தியா அல்லது உண்மையா, என்ற குழப்பமும் நிலவி வந்தது. ஆனால், இது தொடர்பாக கீர்த்தி சுரேஷ் தரப்பிடம் இருந்து எந்த ஒரு விளக்கமும் வரவில்லை.
இந்த நிலையில், தனது திருமணம் பற்றி மனம் திறந்திருக்கும் கீர்த்தி சுரேஷ், இந்த செய்தி எனக்கு பெரும் வியப்பாக இருக்கிறது. இப்படி ஒரு வதந்தி எங்கிருந்து தொடங்கியது என்று தெரியவில்லை. எனக்கு இப்போதைக்கு திருமணம் செய்துக் கொள்ளும் எண்ணம் இல்லை, என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் சிறுவர்களுக்கான படம் மற்றும் ஆன்மீகம் பேசும் திரைப்படங்கள் வெளியாவது அரிதாகிவிட்ட நிலையில், அப்படிப்பட்ட படங்கள் வெளியானாலும் அவை அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய கமர்ஷியல் அம்சங்கள் இல்லாமல் வெளியாவதால் மக்களிடம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை...
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக மட்டும் இன்றி பிரமாண்ட இயக்குநர் என்ற பெருமையோடு வலம் வரும் இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், அமெரிக்கவாழ் இந்தியரான தருண் கார்த்திகேயனுக்கும் ஏப்ரல் 15 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது...
இயக்குநர் கிரிஷ் ஏ.டி இயக்கத்தில், நஸ்லென் மற்றும் மமிதா பைஜூ முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான ‘பிரேமலு’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது...