கொரோனாவால் முடங்கி போயிருக்கும் இந்திய மக்களையும், நாட்டையும் காப்பாற்ற மத்திய அரசு அறிவியல் பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் காட்டிலும் ஆன்மீக பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. கொரோனாவின் ஆரமபக் காலக்கட்டத்தில், ஒன்றாக சேர்ந்து, “கை தட்டுங்கள்” அல்லது “வீட்டில் இருக்கும் சில்வர் பாத்திரங்களை தட்டுங்கள்” என்று பிரதமர் மோடி மக்களுக்கு அறிவுறுத்தினர்.
அவர் எது சொன்னாலும், யோசிக்காமல் செய்பவர்கள், குறிப்பாக சினிமா நடிகர், நடிகைகள் பலர், பல சில்வர் சாமான்களை தட்டிய நிலையில், ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்சார விளக்குகளை அணைத்துவிட்டு, மெழுகுவர்த்தி, அகல் விளக்கு அல்லது செல்போன் வெளிச்சத்தை காட்ட வேண்டும், என்று பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
எப்போதும் போல, அவர் சொல்வதை யோசிக்காமல் செய்யும் கூட்டத்தினர் நேற்று இரவு 9 மணிக்கு மின்சார விளக்குகளை அனைத்துவிட்டு, மெழுகுவர்த்தி, அகல் விளக்கு உள்ளிட்ட விதவிதமான விளக்குகளை பிடித்தார்கள்.
அந்த வகையில், சினிமா நடிகைகள் நயன்தாரா, ஹன்சிகா, மீனா, நடிகர் ரஜினிகாந்தும், அவரது மனைவி உள்ளிட்ட ஏராளமான சினிமா பிரபலங்கள் விளக்கு பிடித்ததோடு, அந்த புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படங்கள்,
நடிகர் ஜெயம் ரவியின் ரசிகர்கள், ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்...
யூடியுப் திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன் இயக்கத்தில் வெளியான ’ஆன்டி இண்டியன்’ படத்தை தயாரித்த ஆதம் பாவா, தனது மூன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘உயிர் தமிழுக்கு’...
கடந்த ஜனவரி மாதம் வெளியான ‘ஹனுமான்’ திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் வர்மா, இந்திய அளவில் கவனம் ஈர்த்திருப்பதோடு, அவரது அடுத்த படைப்பான ‘ஹனுமான்’ படத்தின் தொடர்சியான ‘ஜெய் ஹனுமான்’ படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...