Latest News :

பிரபல இசையமைப்பாளர் மரணம்! - அதிர்ச்சியில் இந்திய திரையுலகம்
Monday April-06 2020

கொரோனா பாதிப்பால் உலகமே ஸ்தம்பித்திருக்கும் நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி பல பிரபலங்கள் உயிரிழந்து வருகிறார்கள். குறிப்பாக ஹாலிவுட் நடிகர்கள், நடிகைகள் உயிரிழப்பு தொடர் கதையாகி வருகிறது.

 

இந்த நிலையில், மலையாள சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவரான எம்.கே.அர்ஜுனன் இன்று உயிரிழந்தார். கேரளாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்திருக்கும் நிலையில், இசையமைப்பாளர் அர்ஜுனனின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், 83 வயதாகும் அர்ஜுனன் வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல் நிலை குறைவால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

50 வருடங்களாக கேரள சினிமாவில் இசையமைப்பாளராக பயணித்து வந்த அர்ஜுனன், சுமார் 200 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இவரிடம் தான் ஏ.ஆர்.ரஹ்மான் முதன் முதலில் கீ போர்ட் கலைஞராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இசையமைப்பாளர் அர்ஜுனனின் மறைவுக்கு மலையாள சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்திய சினிமாவின் முன்னணி ஒலி வடிவமைப்பாளரான ரசூல் பூக்குட்டி அர்ஜூனனின் மறைவுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

இதோ அவரது இரங்கல் பதிவு,

 

Related News

6398

காமெடி நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ‘கலப்பை மக்கள் இயக்கம்’!
Thursday November-20 2025

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...

’மாண்புமிகு பறை’ தலைப்பே ஆழமாக சிந்திக்க வைக்கிறது - தொல்.திருமாவளவன் பாராட்டு
Thursday November-20 2025

அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...

Recent Gallery