Latest News :

தியேட்டர் வேண்டாம், டிஜிட்டலே போதும்! - திசைமாறும் தமிழ் சினிமா
Tuesday April-07 2020

கொரோனா வைரஸ் பாதிப்பால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவிலும் கொரோனா தாக்கம் தீவிரமாகி வரும் நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளது. இருப்பினும், அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது.

 

இதற்கிடையே, முன் எச்சரிக்கை நடவடிக்கைகளால் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டிருப்பதோடு, ஏராளமான சாமாணிய மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல், சினிமா, தொலைக்காட்சி என பொழுதுபோக்கு துறையும் மிகபெரிய சிரமத்தை எதிர்கொண்டு வருகிறது.

 

கொரோனா கட்டுக்குள் வந்தாலும், மூடப்பட்டிருக்கும் சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களை உடனடியாக திறக்க கூடாது, என்று சிலர் கேட்டுக் கொண்டுள்ளனர். அப்படியே சினிமா தியேட்டர்க திறந்தாலும், கொரோனா அச்சத்தால் மக்கள் படம் பார்க்க வர மாட்டார்கள், அதனால், சினிமா துறையில் ஏற்பட்ட பாதிப்பு சீராக காலதாமதமாகும், என்று சில சினிமா பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

 

இந்த நிலையில், கொரோனா கட்டுக்குள் வந்த பிறகு ரிலீஸ் ஆக இருந்த சில திரைப்படங்கள், தற்போதைய சூழலால் டிஜிட்டல் தளங்களில் வெளியாக உள்ளது. ஆம், கொரோனா பாதிப்புக்கு முன் தமிழ் சினிமாவில் சில படங்கள் வெளியானது. ஆனால், அப்படங்கள் வெளியாகி ஒரு சில நாட்களிலேயே தியேட்டர்கள் மூடப்பட்டதால், அப்படங்களின் தயாரிப்பாளர்கள் இரண்டாவது முறையாக அப்படங்களை தியேட்டர்களில் வெளியிட காத்துக் கொண்டிருந்தார்கள்.

 

ஆனால், தற்போது சூழ்நிலையில் தியேட்டர்கள் மீண்டும் திறப்பது, அப்படி திறந்தாலும் மக்கள் வருவார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை, என்பதால், டிஜிட்டல் தளங்களில் படத்தை வெளியிட தொடங்கியுள்ளார்கள். அதன்படி, ஹரிஷ் கல்யான், தன்யா ஹோப், விவேக் ஆகியோரது நடிப்பில் வெளியான ‘தாராள பிரபு’ படம் அமேசான் தளத்தில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் வெளியாக உள்ளது.

 

இப்படத்தை தொடர்ந்து மேலும் சில தயாரிப்பாளர்களும் தங்களது படங்களை டிஜிட்டல் தளங்களில் ரிலீஸ் செய்வத்ற்கான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related News

6401

காமெடி நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ‘கலப்பை மக்கள் இயக்கம்’!
Thursday November-20 2025

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...

’மாண்புமிகு பறை’ தலைப்பே ஆழமாக சிந்திக்க வைக்கிறது - தொல்.திருமாவளவன் பாராட்டு
Thursday November-20 2025

அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...

Recent Gallery