கொரோனா பாதிப்பால் அரசு மேற்கொண்டுள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கையால் சினிமா துறை பாதிக்கப்பட்டிருப்பதோடு, அதை சார்ந்த சினிமா பத்திரிகையாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, நிறுவனம் சாராத ப்ரீலான்ஸர் பத்திரிகையாளர்கள், சொந்தமாக இணையதளம் நடத்துபவர்கள், யுடியுப் சேனல், சினிமா வார இதழ் மற்றும் சினிமா மக்கள் தொடர்பாளர்கள் என அனைத்து தரப்பினரும் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் பெப்ஸி அமைப்பு நிதி திரட்டி வருவது போல, பாதிக்கப்பட்ட சினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவ, சினிமா பத்திரிகையாளர்கள் சங்கங்கள் நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து, நடிகர்கள் சிவகார்த்திகேயன், கார்த்தி, தயாரிப்பாளர் பெப்ஸி சிவா உள்ளிட்ட பல பிரபலங்கள் சினிமா சங்கங்களுக்கும், மக்கள் தொடர்பாளர்கள் சங்கத்திற்கும் நிதி வழங்கினார்கள்.
இதற்கிடையே, பிரதமர் மற்றும் முதல்வர் நிவாரண நிதிக்கு முன்னணி நடிகர்கள் யாரும் நன்கொடை வழங்கவில்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக தமிழ சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் பெப்ஸிக்கும் மற்றும் முதல்வர் நிவாரண நிதிக்கும் நன்கொடை வழங்காததால், விமர்சிக்கப்பட்டு வந்தார்கள்.
இந்த நிலையில், நடிகர் அஜித் சினிமா தொழிலாளர்கள், சினிமா பத்திரிகையாளர்கள், சினிமா பி.ஆர்.ஓ-க்கள் மட்டும் இன்றி நாட்டு மக்களுக்கும் உதவி செய்யும் வகையில் நன்கொடையை வாரி வழங்கியிருக்கிறார்.
ஆம், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் நன்கொடை வழங்கிய அஜித்குமார், முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், பெப்ஸி அமைக்கு ரூ.25 லட்சமும், சினிமா பி.ஆர்.ஓ-க்கள் சங்கத்திற்கு ரூ.2.50 லட்சமும், சினிமா பத்திரிகையாளர்கள் சங்கங்களுக்கு தலா ரூ.2.50 லட்சமும் வழங்கியிருக்கிறார்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...