Latest News :

பிரபல டிவி நடிகை கொலையா? - போலீஸார் விசாரணை
Friday April-10 2020

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால், 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருப்பதால், மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருக்கிறது. இதனை பயன்படுத்தி சிலர் குற்ற செயல்களில் ஈடுபட செய்கிறார்கள்.

 

சென்னை, அண்ணா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் காவலாளி ஒருவரது மனைவியை பால் சப்ளை செய்யும் வாலிபர் ஒருவர், மிரட்டி கற்பழித்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த பெண் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரித்த போலீஸார், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா மூலம் அந்த வாலிபரை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.

 

இந்த நிலையில், பிரபல தெலுங்கு தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றுவதோடு, பல டிவி தொடர்களிலும் நடித்து வரும் நடிகை சாந்தி நேற்று தனது வீட்டில் இறந்து கிடந்ததாக செய்தி வெளியாகியுள்ளன.

 

ஐதராபாத், எல்லா ரெட்டிகுடா இன்ஜினியர் காலனி அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை சாந்தி தனியாக வசித்து வந்தாராம். தனியாக வசித்து வந்த அவர், திடீரென்று இறந்ததால், அவரது மரணம் மர்மமாக உள்ளது. 

 

Actress Viswasanthi

 

இதனால், சாந்தியின் உடலை கைப்பற்றிய போலீஸார், தற்கொலையா அல்லது கொலையா, என்ற பாணியில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Related News

6409

காமெடி நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ‘கலப்பை மக்கள் இயக்கம்’!
Thursday November-20 2025

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...

’மாண்புமிகு பறை’ தலைப்பே ஆழமாக சிந்திக்க வைக்கிறது - தொல்.திருமாவளவன் பாராட்டு
Thursday November-20 2025

அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...

Recent Gallery