தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவரான விக்ரம், மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து வருகிறார். மேலும், அஜய் ஞானமுத்து இயக்கும் ‘கோப்ரா’ படத்தில் நடிப்பவர், அதில் பலவிதமான கெட்டப்புகளில் தோன்றுகிறார்.
இந்த நிலையில், நடிகர் விக்ரம் நடிப்புக்கு முழுக்கு போடப்போவதாகவும், தனது மகன் துருவ் விக்ரமை தமிழ் சினிமாவில் பெரியாளாக்குவதற்காக, நடிப்பதை நிறுத்த முடிவு செய்திருப்பதாக, ஊடகன் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியை மறுத்திருக்கும் விக்ரம் தரப்பு, இதுபோன்ற பொய்யான செய்திகளை எதற்காக வெளியிடுகிறார்கள், என்று தெரியவில்லை. விக்ரம் நடிப்புக்கு முழுக்கு போடப்போகிறார், என்பது பொய்யான செய்தி. அவர் தற்போது பல படங்களில் நடித்து வருவதோடு, மேலும் சில புதுப்படங்களில் நடிப்பது குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.
இப்படி ஒரு செய்தியை வெளியிடும் முன்பு, அது குறித்து சம்மந்தப்பட்டவர்களிடம் விசாரிக்க வேண்டும். அப்படி எதுவும் செய்யாமல் இதுபோன்ற வதந்திகளை பரப்புவது கண்டிக்கத்தக்கது, என்று விளக்கம் அளித்துள்ளனர்.
முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...