Latest News :

100 ஏழை குடும்பங்களுக்கு உதவிய அபி சரவணன்!
Saturday April-11 2020

நடிகர் அபி சரவணன் என்பதைவிட சமூக ஆர்வலர் அபி சரவணன், என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வரும் வகையில், பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு வரும் அபி சரவணன், தான் வசிக்கும் பகுதியில் உள்ள 100 ஏழை குடும்பங்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்திருக்கிறார்.

 

’அட்டக்கத்தி’, ‘குட்டிபுலி’ போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து, பிறகு ‘கேரளம் நாட்டிலம் பெண்களுடனே’ படத்தின் மூலக் ஹீரோவாக உயர்ந்த அபி சரவணன், ‘பட்டதாரி’, ‘மாயநதி’ என தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது ‘பிளஸ் ஆர் மைனஸ்’, ‘இறையான்’, ‘அந்த ஒரு நாள்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் அபி சரவணன், சினிமாவில் என்னதான் பிஸியாக இருந்தாலும், சமூக பிரச்சினைகளிலும் தன்னை புகுத்திக் கொண்டு தன்னால் முடிந்தவரை சமூகத்திற்கு எதாவது செய்து வருகிறார். 

 

அந்த வகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை மக்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்று நினைத்தவர், மதுரையில் தான் வசிக்கும் பகுதி அருகே உள்ள 100 ஏழை குடும்பவங்களுக்கு அரிசி, பலசரக்கு மற்றும் காய்கறிகளை வழங்கியுள்ளார்.

 

அபி சரவணனுடன் காருண்யா 5டி என்டர்டைன்மெண்ட் நிறுவனர் ஜெசியும் இணைந்து இந்த உதவியை செய்திருக்கிறார்.

 

Abi Saravanan

 

இது குறித்து அபி சரவணனிடம் கேட்டதற்கு, “கொரோனா பாதிப்பில் இருந்து தப்ப ஒரே வழி நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி வீட்டிலே இருக்கும் போது, தினக்கூலி தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தேன். என்னால் பெரிய அளவில் செய்ய முடியவில்லை என்றாலும், என்னால் முடிந்த சிறிய உதவியாக இதை நான் செய்திருக்கிறேன். ” என்றார்.

Related News

6415

காமெடி நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ‘கலப்பை மக்கள் இயக்கம்’!
Thursday November-20 2025

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...

’மாண்புமிகு பறை’ தலைப்பே ஆழமாக சிந்திக்க வைக்கிறது - தொல்.திருமாவளவன் பாராட்டு
Thursday November-20 2025

அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...

Recent Gallery