நயன்தாரா கதையின் நாயகியாக நடித்த படம் ‘கோலமாவு கோகிலா’.கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தின் மூலம் சின்னத்திரை பிரபலம் ஜாக்குலின் வெள்ளித்திரையில் அறிமுகமானார். இவர் நயன்தாராவின் தங்கை வேடத்தில் நடித்திருந்தார்.
தற்போது டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதோடு, தொலைக்காட்சி தொடர்களிலும் நடிக்க தொடங்கியிருக்கும் ஜாக்குலின், சினிமாவில் நல்ல வாய்ப்புகளுக்காக எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், கோரானா முன் எச்சரிக்கை நடவடிக்கையால் வீட்டில் இருக்கும் நடிகை ஜாக்குலின், தனது வீட்டு அருகே உணவு இன்றி சுற்றி திரியும் தெரு நாய்களுக்காக தனது வீட்டு அருகே ஒரு இடத்தில் உணவு வைத்திருக்கிறார். அதை தெருவில் சுற்றி திரியும் நாய்களும் சாப்பிட்டுள்ளது.
இதற்கு, ஜாக்குலினின் பக்கத்து வீட்டில் இருப்பவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், ஜாக்குலினுக்கும் அவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டிருக்கிறது. பிறகு ஜாக்குலின் நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
ஆனால், அந்த நபர் ஜாக்குலினின் வீடு புகுந்து அவரை தாக்கியதோடு, ஜாக்குலினின் மதத்தை குறிப்பிட்டு தவறாக பேசியுள்ளார். இதனால் சோகமான ஜாக்குலின் இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...