Latest News :

பிரபல தமிழ் நடிகையின் கணவருக்கு கொரோனா பாதிப்பு! - அதிர்ச்சியில் கோலிவுட்
Thursday April-16 2020

கொரோனா பாதிப்பால் உலக நாடுகள் பெரும் அச்சத்தில் உரைந்திருக்கிறது. இதில், ஏழை, பணக்காரர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால், பலர் வீடுகளை விட்டு வெளியே வருவதில்லை என்றாலும், இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

 

அரசு கொரோனாவை கட்டுப்படுத்த முன் எச்சரிக்கை நடவடிக்கையில் தீவிரம் காட்டினாலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போகிறது.

 

இந்த நிலையில், பிரபல நடிகை ஸ்ரேயாவின் கணவர் ஆண்ட்ரே கொரோனா வைரஸால் பாதித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரேஷா, பட வாய்ப்புகள் குறைந்ததால், தனது காதலரான ரஷ்ய நாட்டை சேர்ந்த ஆண்ட்ரே கோஷேவ் என்பவரை கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். 

 

Actress Shreya and Husband

 

திருமணத்திற்குப் பிறகு ஸ்ரேயாவுக்கு சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததால், அவர் இந்தியாவில் கணவருடன் வாழ்ந்து வந்த நிலையில், அவரது கணவருக்கு கொரோனா பாதித்திருப்பது திரையுலகினர் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

 

கணவருக்கு கொரோனா தொற்று இருப்பதால், நடிகை ஸ்ரேயாவையும் அரசு நிச்சயம் தனிமைப்படுத்தியிருக்கும். ஆனால், அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதா?, என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

 

தமிழில் ‘சண்டக்காரி’ என்ற படத்தில் நடித்து வரும் ஸ்ரேயா, அசுரன் தெலுங்கு ரீமேக்கில் மஞ்சு வாரியர் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

6434

’டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ் 2’ புத்தகம் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற திரை பிரபலங்கள்
Thursday July-03 2025

தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...

பெரிய டங்களில் சட்ட விரோத செயல்கள் தான் பெரிதாகக் காட்டப்படுகின்றன - ’மகேஸ்வரன் மகிமை’ பட விழாவில் கே.ராஜன் பேச்சு
Tuesday July-01 2025

எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...

’தேசிங்குராஜா 2’-வின் வெற்றிக்கு விமல் தான் முக்கிய காரணமாக இருக்கப் போகிறார் - இயக்குநர் எழில் உறுதி
Tuesday July-01 2025

நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...

Recent Gallery