2018 ஆம் ஆண்டு வெளியான ‘ஜானி’ படத்திற்குப் பிறகு தெலுங்குப் படம் ஒன்றில் நடித்த பிரஷாந்த், தமிழ்ப் படத்திற்காக நல்ல கதையை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், இந்தியில் தபு, ராதிகா ஆப்தே, ஆயூஸ்மான் குரானா ஆகியோர் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றிய அவரது தந்தையும், நடிகருமான தியாகராஜன் பிரஷாந்தை ஹீரோவாக வைத்து அப்படத்தை தயாரிக்கிறார்.
மோகன் ராஜா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் இறுதியில் தொடங்க இருந்த நிலையில், கொரோனா பிரச்சினை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தியில் தபு நடித்திருந்த வேடத்தில் அவரையே நடிக்க வைக்க திட்டமிட்ட தியாகராஜன் தரப்பு அவரிடம் அனுகிய போது, அவர் நடிக்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால், அதை மறுத்தியிருக்கும் தியாகராஜன், தபு மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை, அவரிடம் தற்போதும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம், என்று கூறியிருக்கிறார்.
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...