2018 ஆம் ஆண்டு வெளியான ‘ஜானி’ படத்திற்குப் பிறகு தெலுங்குப் படம் ஒன்றில் நடித்த பிரஷாந்த், தமிழ்ப் படத்திற்காக நல்ல கதையை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், இந்தியில் தபு, ராதிகா ஆப்தே, ஆயூஸ்மான் குரானா ஆகியோர் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றிய அவரது தந்தையும், நடிகருமான தியாகராஜன் பிரஷாந்தை ஹீரோவாக வைத்து அப்படத்தை தயாரிக்கிறார்.
மோகன் ராஜா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் இறுதியில் தொடங்க இருந்த நிலையில், கொரோனா பிரச்சினை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தியில் தபு நடித்திருந்த வேடத்தில் அவரையே நடிக்க வைக்க திட்டமிட்ட தியாகராஜன் தரப்பு அவரிடம் அனுகிய போது, அவர் நடிக்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால், அதை மறுத்தியிருக்கும் தியாகராஜன், தபு மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை, அவரிடம் தற்போதும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம், என்று கூறியிருக்கிறார்.

அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...