கொரோனா காரணமாக நாட்டில் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நேரத்தில் பொதுமக்கள் திருமணம் போன்ற சுபகாரியங்களை தள்ளி வைத்து வருகிறார்கள். ஆனால், சில பணம் படைத்தவர்கள் மட்டும் ஊரடங்கையும் மீறி திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை தடபுடலாக நத்தி வருகிறார்கள்.
அந்த வகையில், கர்நாடகவின் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகனும், கர்நாடக சினிமாவின் இளம் நடிகருமான நிகிலுக்கும், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணப்பாவின் பேத்தி ரேவதிக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. கொரோனா பாதிப்பிலும் நடைபெற்ற இந்த திருமணம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.
இதற்கிடையே, இந்த திருமணனத்தில் 80-க்கும் அதிகமானோர் கலந்துக் கொண்டதாகவும், திருமணத்தில் பங்கேற்றவர்கள் சமூக விலகலை கடைபிடிக்காததோடு, முக கவசங்கள் அணியாலும் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த திருமணத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், பாலிவுட் சினிமாவின் மூத்த நடிகையான ரவீனா டாண்டன் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியிட்டிருக்கும் பதிவில், “நாட்டில் ஏராளமானோர் தங்கள் குடும்பங்களோடு சேர முடியாமல் பசி, பட்டினியில் உள்ளனர். அவர்களுக்கு சிலர் உதவிகள் செய்து கொண்டு இருக்கிறார்கள். இதுவெல்லாம் தெரியாததுபோல் சில ஜீவன்கள் இருக்கின்றன. அந்த திருமண நிகழ்ச்சியில் என்ன பரிமாறினார்கள்? என்று நான் யோசிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல், மற்றொரு பாலிவுட் நடிகர் பரேஸ் ராவால், ஊரடங்கை மீறி இந்த திருமணத்தை நடத்தியவர்கள் போலீஸ் கைது செய்ய வேண்டும். மணமகனும், மணமகளும் சில நாட்கள் சிறையில் இருந்தால் தான் புத்தி வரும், என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...