Latest News :

குஷ்பூ, ராதிகா இடையே திடீர் மோதல்!
Monday April-20 2020

தமிழ் சினிமா மட்டும் இன்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று தென்னிந்திய மொழி சினிமாக்களில் முன்னணி ஹீரோயின்களாக வலம் வந்தவர்கள் ராதிகா மற்றும் குஷ்பூ. குஷ்பூவை விட ராதிகா சீனியர் என்றாலும், குஷ்பூவுக்கு கோவில் கட்டும் அளவுக்கு தமிழகத்தில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

 

தற்போது இருவருமே குடும்பம், குழந்தை என்று செட்டில் ஆனாலும், தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதோடு, தொலைக்காட்சி தொடர்கள் தயாரிப்பது நடிப்பதோடு, அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

 

இந்த நிலையில், தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்பு தொடர்பான விவாகரத்தில் நடிகைகள் ராதிகா மற்றும் குஷ்பூ இடையே திடீர் மோதல் ஏற்பட்டிருப்பது சின்னத்திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளரான நடிகை குஷ்பூ, டிவி சேனல்கள் மே மாதம் 5 ஆம் தேதிக்கு பிறகு சீரியல்களின் படப்பிடிப்பை நடத்தி 11 ஆம் தேதி ஒளிபரப்பை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்துள்ளதாகவும், ஆனால், அரசு மே மாதத்தின் நிலை குறித்து ஏப்ரல் 25, 26 ஆகிய தேதிகளில் தான் முடிவு எடுக்கப்படும், என்று தெரிவித்திருப்பதால் நாம் காத்திருப்போம், என்று தெரிவித்துள்ளார்.

 

இதையடுத்து, குஷ்பூவின் பதிவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை ராதிகா, சேனல் சார்பில் சீரியல் படப்பிடிப்புகளை தொடங்க வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. இதை நான் உறுதிப்படுத்தி விட்டேன். மேலும், சென்னை இன்னும் ஆபத்தான கட்டத்தில் தான் இருக்கிறது. மேலும், கோடம்பாக்கம் கட்டுப்பாடுகளை தளர்த்த முடியாத ரெட் சோன் பகுதியாக இருப்பதால், இப்போதைக்கு படப்பிடிப்பு தொடங்க கூடாது. மேலும், மீண்டும் மீண்டும் ஒன்றை இங்கே தெளிவுப்படுத்த விரும்புகிறேன், எந்த டிவி சேனலும் சீரியல் படப்பிடிப்பை தொடங்க சொல்லவில்லை, என்று தெரிவித்துள்ளார்.

 

ஒரே விஷயத்தை ராதிகாவும், குஷ்பூவும் மாறுபட்ட கருத்தோடு பேசியிருப்பதால், இருவருக்கும் இடையே மோதல் இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்களது இந்த மாறுபட்ட கருத்துக்கு சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் விளக்கம் அளித்தால் தான் இந்த பிரச்சினையில் தெளிவு கிடைக்கும்.

Related News

6453

காமெடி நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ‘கலப்பை மக்கள் இயக்கம்’!
Thursday November-20 2025

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...

’மாண்புமிகு பறை’ தலைப்பே ஆழமாக சிந்திக்க வைக்கிறது - தொல்.திருமாவளவன் பாராட்டு
Thursday November-20 2025

அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...

Recent Gallery