கொரோனாவால் பாதித்திருக்கும் சினிமா தொழிலாளர்களுக்கு உதவி செய்யும் வகையில், பெப்ஸி அமைப்பு நன்கொடை வழங்கிய நடிகர் விஜய், பிரதமர் நிவாரண நிதி மற்றும் தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கும் நன்கொடை வழங்கினார்.
மேலும், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகம் மற்றும் பாண்டிச்சேரி, என தென்னிந்திய மாநிலங்களின் முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கும் விஜய் நன்கொடை வழங்கியதோடு, தனது மக்கள் இயக்கம் மூலம், மாவட்டம் ரீதியாக வறுமையில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு உதவி செய்வதற்காகவும் ஒரு குறிப்பிட்ட தொகையை ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் வழங்கியுள்ளார்.
இந்த நிலையில், சிவகாசி அருகே உள்ள சிவகாமிபுரம் கிராமத்தில் வசிக்கும் பட்டாசு தொழிலாளர்கள் வறுமையில் வாடுவதை அறிந்த, விருதுநகர் மேற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்க இளைஞரணியினர், 10 நாட்களுக்கு தேவையான காய்கறிகள், அரிசி மற்றும் மளிகை பொருட்களை, தலைவர் மாரிசெல்வம் தலைமையில் வழங்கியுள்ளார்கள்.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...