அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படம் தீபாவளியன்று வெளியாகியுள்ள நிலையில், விஜயின் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். தற்போது ‘ஸ்பைடர்’ பணிகளில் பிஸியாக உள்ள முருகதாஸ் அபப்டத்தின் ரிலிஸிற்கு பிறகு, விஜய் படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளார். அடுத்த வருடம் ஜனவரி மாதம் விஜய் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் முருகதாஸ் அறிவித்துள்ளார்.
இதற்கிடையே, ‘மெர்சல்’ படத்தின் அனைத்து பணிகளும் நேற்றுடன் முடிவடைந்துவிட்டது. இதையடுத்து விஜய் இந்தியாவை விட்டே கிளம்பிவிட்டார்.
ஏற்கனவே தனது குடும்பத்தாரை பார்சிலோனாவுக்கு அனுப்பி வைத்த விஜய், மெர்சல் படத்தின் வியாபாரம் சம்மந்தமான சில பணிகள் இருந்த காரணத்தால், தனது குடும்பத்தாருடன் செல்லவில்லையாம். நேற்று எஞ்சியிருந்த பணியும் முடிந்ததால், இன்று விஜய் பார்சிலோனாவுக்கு கிளம்பிவிட்டார். சென்னையிலிருந்து துபாய்க்குச் சென்று அங்கிருந்து பார்சிலோனாவுக்கு செல்கிறார்.
தனது குடும்பத்தோடு பார்சிலோனாவுக்கு சுற்றுலா சென்றுள்ள விஜய், ‘மெர்சல்’ படம் வெளியீட்டுக்கு முன்பாகவே இந்தியா திரும்ப திட்டமிட்டுள்ளாராம்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...