Latest News :

மதுக்கடை திறப்புக்கு ‘ஆடவர்’ பட தயாரிப்பாளர் எதிர்ப்பு!
Tuesday May-05 2020

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு சுமார் 410 நாட்களை கடந்திருக்கும் நிலையில், சில கட்டுப்பாடுகளுடன் சில தளர்வுகளை அரசு நேற்று முதல் மேற்கொண்டிருக்கும் நிலையில், வரும் மே 7 ஆம் தேதி முதல் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கவும் அனுமதி அளித்திருக்கிறது. இது மக்களுக்கும், பெண்களுக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது.

 

அரசின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ‘ஆடவர்’ திரைப்படத்தின் தயாரிப்பாளரும், ‘மக்கள் செயல் பேரவை’ தலைவருமான சொ.சிவக்குமார் பிள்ளை மதுக்கடை திறப்பு எதிர்ப்பு தெரிவித்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

இதோ அந்த கட்டுரை,

 

சிங்கம் இல்லா காட்டுக்குள் நரி நாட்டாண்மை பண்ணுவதுபோல் ஆளுமை இல்லா தமிழகத்தில் காசுக்காக, பதவி சுகத்துக்காக ஆட்சியில் இருக்கும் முதல் அமைச்சர் முதல் சட்டமன்ற உறுப்பினர்வரை ஆளும்கட்சி என்று சொல்லிக்கொண்டு அவர்கள் செய்வதை பார்த்ததால் தமிழக மக்களை வேதனையில் விழி பிதுங்க வைக்கிறார்கள்.....

 

கடந்த மூன்றுமாதமாக கொரனவை ஒழிக்கிறோம் நீங்கள் வீட்டில் இருங்கள் என்று சொன்னார்கள் கொரானாவின் தாக்கம் குறைந்ததாக தெரியவில்லை....

 

கோவில்களின் கதவுகளை இழுத்து மூடிவிட்டு மதுக்கடைகள் கதவுகளை திறந்து காசு பார்க்க போகிறார்கள் ....

 

கொரானாவின் காற்றும் குறையாது ....

மதுவின் நாற்றமும் குறையாது ....

 

உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன் ....

 

நம் கிராமங்களில் இருப்பவர்களை மதுக்கடைக்கு போகவிடாதீர்கள் ....மது குடிப்பவர்களை அழித்துவிடும்.... கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை கொள்ளும் விஷம் என்று தெரியாமல் குடிக்கிறார்கள்.

 

இந்த நேரத்தில் மதுக்கடைக்கு போவதால் கொரானாவின் தாக்கம் அவர்களுக்கு வந்து அவர்களுக்கு மட்டுமல்லாது அவர்கள் குடும்பத்தையே பாதிக்கும்....

 

இந்த நேரத்தில் வீட்டில் இருக்கும் இளைஞர்களும், தாய்மார்களும் கவனமாக இருக்கவேண்டும் ....

 

உங்கள் இடத்தில் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்....

 

யாரையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பாதீர்கள்.

 

மதுவை குடிப்பதற்கு அனுமதிக்காதீர்கள் ....

 

மது குடிப்பதினால் நம்மையும் நம்மை சார்ந்தவர்களையும் காலம் முழுவதும் கவலை படும்படி செய்துவிடும்....

 

மதுவை தவிர்ப்போம்...

 

மகத்தான வாழ்வை தொடர்வோம்....

Related News

6506

‘டிமாண்டி காலனி 3’-யின் ‘தி லைப்ரரியன்’ யார் தெரியுமா?
Wednesday March-18 2026

முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

Recent Gallery