இன்று உலகமே கொரோனா வைரஸுக்கு எதிராகப் பெரும் போரை நிகழ்த்தி வருகிறது. பொதுவாக போர்களில் வெல்ல ஆயுதங்கள் தான் தேவை. ஆனால் இந்தக் கொரோனா வைரஸ் ஆயுதங்களுக்கு அப்பார்ப்பட்டது. ஆயினும் எல்லாவற்றையும் விட பெரிய ஆயுதம் மனிதனின் அன்பு தான். அந்த அன்பாயுதத்தால் ஒரு பாடலை எழுதி அற்புதமாக வெளியிட்டு மக்கள் மனதில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
”விழா கண்ட நகரெங்கே...” எனத் துவங்கும் இப்பாடலை தும்பா புரொடக்சன் தயாரித்துள்ளது. எம்.ராம்குமார் இயக்கிய இப்பாடலை டாக்டர் பாலன் எழுதியுள்ளார். சந்தோஷ் சேகர் இசையமைத்துள்ளார்.
ஒரு மென்சோகத்தை படரவிடுவது போல் துவங்கும் இப்பாடல் மெல்ல நம் மனதிற்குள் நம்பிக்கையை விதைக்கிறது. மேலும் பல்வேறு அரசியல் சதுரங்கத்தையும் பாடல் வரிகள் மூலமாகவும் காட்சி அமைப்பு மூலமாகவும் உணர்த்துகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக முத்தாய்ப்பு வைத்தாற் போல் இன்று மருத்துவர்கள் நமக்காக அளித்து வரும் மாசற்ற சேவைக்கு இப்பாடல் மரியாதை செய்துள்ளது.
யுடியுபில் வெளியாகி பரவலான வரவேற்பைப் பெற்று வரும் இந்த பாடல் இதோ,
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...