‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தில் புஷ்பா என்ற வேடத்தில் நடித்து பிரபலமானவர் ரேஷ்மா. அதற்கு முன்பு சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருந்தவர், சூரியுடன் சேர்ந்து நடித்த “புஷ்பா புருஷன் யாரு?” என்ற காமெடி காட்சி மூலம் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமாகிவிட்டார்.
இதையடுத்து, பிக் பாஸ் சீசன் 3-யில் பங்கேற்ற ரேஷமாவுக்கு பல சினிமா வாய்ப்புகள் கிடைத்தது. மேலும், அந்த நிகழ்ச்சியின் மூலம் தனக்கு திருமணமாகிவிட்டதையும், தனக்கு ஒரு மகன் இருக்கிறான், என்ற ரகசியத்தை ரேஷ்மா கூறினார். அதுவரை அவருக்கு திருமணமாகவில்லை, என்று நினைத்திருந்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
தனக்கு மகன் இருக்கிறான், என்று கூறினாலும் மகனின் புகைப்படத்தை வெளியிடாமல் இருந்த ரேஷ்மா, தற்போது தனது மகனின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருக்கும் ரேஷ்மாவுக்கு அவரது மகன் ராகுல் காபி போட்டு கொடுக்கிறார். அந்த வீடியோவை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் ரேஷ்மா, கடந்த இரண்டு நாட்களாக மனதளவு பாதிக்கப்பட்டிருந்த என்னை சிரிக்க வைப்பதற்காக தனது மகன் இப்படி காபி போட்டு கொடுத்தார், என்றும் பதிவிட்டுள்ளார்.
தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் ரேஷ்மாவுக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா! என்று ஆச்சரியப்படுகிறார்கள்.
இதோ அந்த வீடியோ,
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...