சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்படும் வாணி போஜன், தற்போது பெரிய திரையில் நயன்தாராவின் இடத்தை பிடிப்பதற்கான முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார். வாணி போஜன் வெள்ளித்திரையில் அறிமுகமான ‘ஓ மை கடவுளே’ மிகப்பெரிய வெற்றி பெற்றதால், அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வருகிறதாம். ஆனால், கொரோனா பாதிப்பால் புது படங்களில் கமிட் ஆவதை அவ நிறுத்தி வைத்திருக்கிறார்.
இதற்கிடையே கார்த்திக் சுப்புராஜ் தயாரித்திருக்கும் வெப் சீரிஸ் ஒன்றில் வாணி போஜன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இதில் கதாநாயகனாக ஜெய் நடித்திருக்கிறார். நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்காக கார்த்திக் சுப்புராஜ் தயாரித்திருக்கும் இந்த வெப் சீரிஸை அவரது உதவி இயக்குநர் இயக்கியிருக்கிறார்.
திரைப்படத்திற்கு இணையாக 8 எப்பிசோட்களாக உருவாகியிருக்கும் இந்த வெப் சீரிஸின் அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், விரைவில் நெட் பிளிக்ஸில் வெளியாக உள்ளது.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...