கொரோனா பாதிப்பால் சினிமா துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சினிமா தொழிலாளர்கள் முதல் முதலாளிகளான திரைப்பட தயாரிப்பாளர்கள் வரை அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிப்படைந்திருப்பதால், சில துறைகள் இயங்க அரசு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியது போல், சினிமா துறையின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளுக்கும் அனுமதி வழங்க வேண்டும், என்று பெப்ஸி அமைப்பும், திரைப்பட தயாரிப்பாளர்களும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை விடுத்தனர்.
தயாரிப்பாளர்களின் இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த தமிழக அரசு, சினிமாத் துறையின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளான, எடிட்டிங், டப்பிங் உள்ளிட்ட பணிகளை செய்வதற்கு இன்று அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, வரும் மே 11 ஆம் தேதி முதல் திரைப்படங்களின் எடிட்டிங், டப்பிங், ஒலி சேர்ப்பு, பின்னணி இசை சேர்ப்பு உள்ளிட்ட பின்னணி வேலைகள் தொடங்க உள்ளது.
இதன் மூலம், படப்பிடிப்பு நிறைவடைந்த திரைப்படங்கள் வெளியீட்டுக்கு தயாராகும். அதேபோல், இப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்று, போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளுக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...