தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த தமன்னா, தற்போது ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். அம்மணியின் கைவசம் தமிழ்ப் படங்கள் எதுவும் இல்லை. அதனால் தான் என்னவோ, தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு மட்டும் நன்கொடை வழங்கியவர், தமிழ் சினிமா தொழிலாளர்களை கண்டுக்கொள்ளவில்லை.
தற்போடு கொரொனா ஊரடங்கினால் தனது இல்லத்தில் இருக்கும் தமன்னா, ஊடகம் ஒன்றுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், தனது 15 வயதில் நடிக்க வந்த போது தனக்கு ஏற்பட்ட ஷாக்கிங் அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டிருக்கிறார்.
அதாவது, தமன்னாவுக்கு 15 வயது இருக்கும் போது அவருக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைத்ததாம். அப்போது நடிப்பில் பெரிய அனுபவம் இல்லாத அவர், யாரை அணுகி எப்படி படங்களில் ஒப்பந்தமாவது என்று கூட தெரியாமல் இருக்கும் போது, தன்னை தேடி வந்த வாய்ப்பை விட்டு விடக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்தாராம்.
அதே சமயம், திடீரென்று பட வாய்ப்பினால் அதிர்ச்சியான தமன்னா, சற்று சுதாரித்துக் கொண்டு அப்படத்தில் நடிக்க ஓகே சொன்னதோடு, நடித்தும் முடித்துவிட்டாராம். அவரது அந்த முதல் படம் ஓடவில்லை என்றாலும், அவருக்கு அது நல்ல அனுபவமாக இருந்ததாம்.
மேலும், அவரிடம் திரையுலகில் எந்த முன்னணி நட்சத்திரம் போல வலம் வர விரும்புகிறீர்கள்? என்று யாராவது கேட்டால், நடிகர் அஜித்தை போல வர வேண்டும், என்று பதில் அளிப்பாராம். அந்த அளவுக்கு அஜித்தின் எளிமை அவரை கவர்ந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...