கடந்த மே மாதம் மாவட்டம் வாரியாக தனது ரசிகர்களை அழைத்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட ரஜினிகாந்த், அவர்களது முன்னிலையில் பேசும் போது, தனது அரசியல் பிரவேசம் குறித்து சூசகமாக கூறினார். இதையடுத்து ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி, என்று அவரது நெருங்கிய நண்பர்கள் கூறி வந்த நிலையில், அரசியல் தலைவர்கள், முக்கியமான ஊடக நிறுவனங்களின் மூத்த அதிகாரிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், ஏற்கனவே 17 மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை அழைத்து புகைப்படம் எடுத்துக் கொண்ட ரஜினிகாந்த், மீதியுள்ள 15 மாவட்டத்தை சேர்ந்த ரசிகர்களை அக்டோபர் மாதம் சந்திக்க முடிவு செய்துள்ளாராம். தொடர்ச்சியாக 6 நாட்கள் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படிருப்பதோடு, இந்த கூட்டத்தில் தனது அரசியல் பிரவேசம் குறித்து வெளிப்படையாக அறிவிக்கவும் ரஜினிகாந்த் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட ஏற்பாடு நடந்து வருகிறது. மேலும், பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘காலா’ படத்தில் ரஜினி தொடர்பாக காட்சிகள் இன்னும் சில தினங்களில் முடியப்போவதால், அடுத்ததாக அரசியல் வேலைகளில் ரஜினிகாந்த் தீவிரம் காட்டப் போவதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...