மேடை நிகழ்ச்சிகளில் இருந்து டிவி நிகழ்ச்சிக்கு முன்னேறிய ரோபோ சங்கர், தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். அவரது மனைவி பிரியங்காவும், திரைப்படங்களில் நடிக்க தொடங்கியதோடு, அவரது மகளும் ‘பிகில்’ படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடித்தார்.
தற்போது ரோபோ சங்கரின் குடும்பமே நடிப்பு துறையில் ஈடுபட்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவர்கள் பற்றி எந்த ஒரு தகவலாக இருந்தாலும் அதை வைரலாக்கி விடுகிறார்கள்.
இந்த நிலையில், ரோபோ சங்கரின் மனைவி பிரியங்காவின் அம்மா இன்று அதிகாலை மரணமடைந்தார். இதனால் ரோபோ சங்கரின் குடும்பம் பெரும் சோகத்தில் உள்ளது. இந்த தகவல் அறிந்த அவரது ரசிகர்களும் கவலை அடைந்திருக்கிறார்கள்.

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...