Latest News :

பஷீர் தயாரித்து ஹீரோவாக நடிக்கும் ‘குற்றாலம்’ படத்தின் டப்பிங் பணி தொடங்கியது
Tuesday May-12 2020

கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 50 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், தமிழக அரசு சில துறைகள் மற்றும் அலுவலகங்கள் இயங்க அனுமதி அளித்துள்ளது. அதன்படி, திரைப்பட தயாரிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்ற அரசு, திரைப்படங்களின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளான டப்பிங், ஒலி சேர்ப்பு, எடிட்டிங், கிராபிக்ஸ் உள்ளிட்ட பணிகள் மற்றும் அது சார்ந்த நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்கியுள்ளது.

 

இதனால், நேற்று முதல் சில திரைப்படங்களின் பின்னணி வேலைகள் தொடங்கியிருக்கும் நிலையில், ஜெ.எம்.பஷீர், தனது ‘குற்றாலம்’ படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார்.

 

நடிகரும், தயாரிப்பாளருமான ஜே.எம்.பஷீர், தனது டிரெண்ட்ஸ் சினிமா நிறுவனம் சார்பில், ‘குற்றாலம்’ என்ற படத்தை தயாரித்து இயக்குவதோடு, கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இதில் கதாநாயகிகளாக மீனுகார்த்திகா, செளந்திரிகா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் ராதாரவி, பவர் ஸ்டார், தாடி பாலாஜி, ஆனந்த் பாபு, ஸ்டண்ட் மாஸ்டர் தவசிராஜ், ஏ.எம்.செளத்ரி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

 

கடந்த மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், படக்குழு டப்பிங் பணிகளை மேற்கொள்ள தயாரான போது, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், டப்பிங் பணிகளை தொடர்ந்து செய்ய முடியாமல் போனது.

 

தற்போது தமிழக அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, ஜே.எம்.பஷீர் தனது ‘குற்றாலம்’ படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கினார். படத்தின் ஹீரோவாக பஷீர், தனது காட்சிகளுக்கு டப்பிங் பேசினார். 

 

தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் சமூக இடைவெளியுடன் மேற்கொள்ளப்படும் ‘குற்றாலம்’ படத்தின் டப்பிங் பணி, படத்தின் இசையமைப்பாளர் ஸ்டீபன் ராயல் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது.

Related News

6547

காமெடி நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ‘கலப்பை மக்கள் இயக்கம்’!
Thursday November-20 2025

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...

’மாண்புமிகு பறை’ தலைப்பே ஆழமாக சிந்திக்க வைக்கிறது - தொல்.திருமாவளவன் பாராட்டு
Thursday November-20 2025

அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...

ஆதரவற்றோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!
Wednesday November-19 2025

தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...

Recent Gallery