80 களில் தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாக்களிலும் முன்னணி கதாநாயகிகளகா வலம் வந்த ராதிகா, சுஹாசினி, ஊர்வசி, குஷ்பூ ஆகிய நான்கு பேரையும் முதல் முறையாக இணைத்ததோடு, மீண்டும் அவர்களை கதையின் நாயகிகளாக்கியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.
ஜேம்ஸ் வசந்தன் கதை எழுதி, இசையமைத்து இயக்கும் படம் ‘ஒ அந்த நாட்கள்’. இப்படத்தின் கதையின் நாயகிகளாக ராதிகா, சுஹாசினி, ஊர்வசி, குஷ்பூ ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஜித்தின் ராஜ் - லதா ஹெக்டே ஜோடியும், ஒய்.ஜி. மகேந்திரன், சுலக்ஷனா, மனோபாலா, பானுசந்தர் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
1980’களில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற நான்கு வெவ்வேறு படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருந்த ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி ஆகியோருடைய கதாபாத்திரங்களின் நீட்சியை பின்புலமாகக் கொண்டும், அவர்களின் தற்போதைய வாழ்வின் நிதர்சனத்தையும் அடித்தளமாக கொண்டும், ஒரு முற்றிலும் வித்தியாசமான குடும்ப பாங்கான கதையை படைத்திருக்கிறார் இயக்குநர் ஜேம்ஸ் வசந்தன்.

ரொமாண்டிக் காமெடி கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு ஷரன் சாமுவேல் ஒளிப்பதிவு செய்ய, தேசிய விருது பெற்ற சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்கிறார். ஜான் பிரிட்டோ நடனம் அமைக்கிறார்.
மிராக்கிள் எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் சார்பில் ஜேம்ஸ் வசந்தன் தயாரிக்கவும் செய்யும் இப்படம் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு என்று மூன்று மொழிகளில் உருவாகிறது.
80 சதவீத காட்சிகள் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் படமாக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்த வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...
முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...