தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வரும் விஷால், ‘துப்பறிவாளன் 2’ படம் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாக உள்ளார்.
இந்த நிலையில், கொரோனாவினால் வாழ்வாதரத்தை இழந்து கஷ்ட்டப்படும் ஏழைகள் மற்றும் நலிந்த நடிகர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களுக்கு விஷால், தனது தேவி அறக்கட்டளை மூலம் சத்தமில்லாமல் நிவாரண பொருட்கள் வழங்கி வருகிறார்.
அதன்படி, தூய்மை பணியாளர்கள், ஆட்டோ ஓட்டும் பெண்கள், சினிமா தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை விஷால் வழங்கி வருகிறார்.

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகில் உள்ள இலங்கை தமிழர்கள் முகாம்களில் இருக்கும் 300 குடும்பங்களுக்கு சமீபத்தில் நிவாரணப் பொருட்கள் வழங்கிய விஷால், தான் தத்தெடுத்த தஞ்சாவூர் மாவட்டம், கார்கவயல் கிராம மக்கள் அனைவருக்கும் நிவாரண உதவி வழங்கினார். இப்படி தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி பொருட்கள் வழங்கி வரும் விஷால், இதுவரை 5000 பேருக்கு மேல் நிவாரண பொருட்கள் வழங்கியுள்ளார்.
இந்த பணிகளை, விஷாலின் தேவி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளரும், விஷால் மக்கள் நல இயக்கத்தின் செயலாளருமான ஹரிகிருஷ்ணன் மேற்கொண்டு வருகிறார்.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...