கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கடந்த 50 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு நீடித்து நீடித்து வருவதோடு, நாடு முழுவதும் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்தது. தற்போது தமிழகம், ஆந்திரா, டெல்லி, கர்நாடகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கேரளாவை சேர்ந்த சீரியல் நடிகை மஞ்சு சீனி, என்பவர் தனது வீட்டில் கணவருடன் சேர்ந்து சாராயம் காசி, போலீசில் பிடிபட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் மதுக்கடைகள் மூடப்பட்டதால், அங்கு சிலர் கள்ளச்சாரம் காசி விற்பனை செய்து வருகிறார்கள். அவர்களை பிடிக்க கேரள காவல் துறை தனிப்படை அமைத்திருக்கும் நிலையில், சீரியல் நடிகை மஞ்சு சீனி, தனது வீட்டில் கள்ளச்சாரம் காசி விற்பனை செய்யும் ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து, அவரது வீட்டில் சோதனை நடத்திய போது, சுமார் 75 லிட்டர் சாராயம் தயாரிப்பதற்கான உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கினால் சினிமா மற்றும் சீரியல் படப்பிடிப்புகள் இல்லாததால், வருவாய் இன்றி கஷ்ட்டப்பட்டதனால் தான் சாராம் காசி விற்பனை செய்ததாக நடிக்கை மஞ்சு சீனி தெரிவித்துள்ளார். மேலும், அவருடன் சேர்ந்து சாராயம் காசிய அவரது கணவர், அவருக்கு 4 வது கணவர் என்றும், அவர் மீது கொலை வழக்குகள் இருப்பதும், போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...